சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நாளை நடக்கும் அடுத்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்சி அணியை சென்னையின் எப்சி மீண்டும் சந்திக்கிறது. இந்தப் போட்டியில் வென்றால், பெங்களூரு எப்சியை பின்தள்ளி முதலிடத்தைப் பிடிக்க சென்னையின் எப்சிக்கு வாய்ப்பு உள்ளது.
ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் நான்காவது சீசன் நடந்து வருகிறது. முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்சி, 12 போட்டிகளில் 7 வெற்றி, 2 டிரா, 3 தோல்விகளுடன், 23 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
