சென்னை: தமிழகத்தை நோக்கி இரண்டு புயல் வரப் போகிறது, நல்ல மழை பெய்யும் என்று கூறப்பட்ட சில மணி நேரத்திலேயே, அது அதிமுக அமைச்சர்கள் சொல்லியதை போன்று பொய்யான செய்தி என்று தெரிந்ததும் தமிழ் மக்கள் எப்படி புஸ் என்று ஆனார்களோ, அதுபோன்ற நிலையில்தான் தமிழ் தலைவாஸ் அணியும் உள்ளது.
புரோ கபடி லீக் 5வது சீசன் போட்டிகளில், சென்னை ஆட்டங்கள் நேற்றுடன் முடிவுக்கு வந்தன. நேற்று இரவு நடந்த கடைசி ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் அணியும், பெங்களூரு புல்ஸ் அணியும் மோதின.