சென்னை: ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகா பல்லிகல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் ஸ்குவாஷ் அமைப்பில் பயிற்சியாளர் இல்லாமலேயே நாங்கள் போட்டிகளில் பங்கேற்று வருகிறோம் என தெரிவித்து இருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் தற்போது ஸ்குவாஷ் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால், ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன் இந்த தேவையற்ற சர்ச்சை உருவாகியுள்ளது.