முதல் ஓவரில் டவல் இல்லை
அதற்கு முந்தைய ஓவரின்போது டவல் சிக்னலை ஸ்ரீசாந்த் காட்டவில்லையாம்.
டவல்இருந்தால் பெட்டுக்கு ரெடி
டவல் சிக்னல் காட்டினால் அந்த ஓவரில் புக்கிகள் பெட் வைக்கலாம் என்றும் அர்த்தமாம்.
பிக்ஸ் செய்து விட்டுக் கொடுத்த 14 ரன்கள்
மேலும் ஏற்கனவே பிக்ஸ் செய்ததன்படி 14 ரன்களை விட்டுக் கொடுத்தாதராம் ஸ்ரீசாந்த்
பல மாத விசாரணை
ஐபிஎல்லில் நடைபெறும் பெட்டிங்குகள், ஸ்பாட் பிக்ஸிங் உள்ளிட்டவை குறித்து பல மாதங்களாகவே துப்பு துலக்கப்பட்டு வந்ததாம். போதிய ஆதாரங்கள், தகவல்களைச் சேகரித்து வைத்திருந்த போலீஸார் கடைசியில் கையும் களவுமாக பிடித்தனராம்.
கோட் வேர்ட்
மேலும் புக்கிகளுக்கும், வீரர்களுக்கும் இடையிலான தொலைபேசி அழைப்புகளும் ஆராயப்பட்டனவாம். அப்போது இரு தரப்பும் ரகசிய சங்கேத வார்த்தைகளைப் பயன்படுத்தியதும் தெரிய வந்ததாம்.
மறதியால் 20 லட்சத்தை திருப்பிக் கொடுத்த சண்டிலா
கைதான இன்னொரு வீரரான அஜீத் சண்டிலா, புக்கிகளிடம் தான் வாங்கிய ரூ. 20 லட்சம் பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டாராம் - காரணம் சிக்னலை உரிய முறையில் காட்ட மறந்ததால்.
புனேவுக்கு எதிரான போட்டியின்போது
மே 5ம் தேதி புனே வாரியர்ஸுக்கு எதிராக நடந்த போட்டியின்போது சிக்னலை காட்ட மறந்து விட்டாராம் சண்டிலா. அப்படிக் காட்டுவதற்காக அவர் ரூ. 20 லட்சம் அட்வான்ஸ் வாங்கியிருந்தாராம். ஆனால் சிக்னல் காட்ட மறந்ததால் அட்வான்ஸை திருப்பிக் கொடுத்து விட்டாராம்.
சட்டையைக் கழற்றனுமாம்...
அதாவது அந்த குறிப்பிட்ட ஓவரின்போது 14 ரன்களை விட்டுத் தர வேண்டும். மேலும் தனது டீ சர்ட்டை இரண்டு முறை கழற்றுவது போல செய்ய வேண்டும். இதை செய்யத் தவறி விட்டாராம் சண்டிலா.
13 ரன்களுக்கு 60 லட்சம் வாங்கிய அங்கீத் சவான்
இன்னொரு வீரரான அங்கீத் சவான், 13 ரன்களை விட்டுக் கொடுத்ததற்காக ரூ. 60 லட்சம் பணம் வாங்கினாராம்.
வேறு யாருக்கும் தொடர்பில்லை
இந்த ஐபிஎல் மோசடியில் வேறு அணிகளைச் சேர்ந்த வேறு எந்த வீரருக்கும் தொடர்பு இல்லை என்று டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார் கூறியுள்ளார்.