நேஷனல் சாம்பியன்
ஆனால், இதுவரை ரசிகர்களில் ஒருவராக கைத்தட்டி, விசிலடித்து கொண்டாடிய ஒரு நபர், திடீரென ரெஸ்ட்லிங் ஹீரோவாக உருவெடுத்தால்..? WWE ரிங்-குக்குள் நின்று எதிராளிகளை துவம்சம் செய்தால்.... ஆம்! தமிழகத்தில் இருந்து ஒரு வீரர் ரெஸ்ட்லிங் ரிங் ஏறி கலக்கிக் கொண்டிருக்கிறார். ப்ரோ ரெஸ்லிங் உலகின், முதல் தமிழனாக சாதனை படைத்தவர், CWE-யின் நேஷனல் சாம்பியன் ஜெய் ஜாக்சன். திண்டுக்கல்லில் இருந்து இன்று ரெஸ்ட்லிங்கில் தனக்கென ஒரு முத்திரை பதித்திருக்கிறார்.
விவசாய குடும்பம்
இவரது உண்மையான பெயர் ஜெயபாண்டியன். ஜெய் ஜாக்சன் என்பது ரிங் பெயர். திண்டுக்கல் மாவாட்டம், நிலக்கோட்டை அருகில் உள்ள முத்துக்காமன்பட்டி எனும் கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர். இவருக்கு மொத்தம் நான்கு மூத்த சகோதரர்கள் இருக்கிறார்கள்.
கிரேட் காளி நண்பர்
சிறுவயதில் இருந்தே ரெஸ்ட்லிங் மீதிருந்த ஆர்வத்தால், கடும் முயற்சிக்கும், உழைப்புக்கும் பிறகு தனக்கான இடத்தைப் பிடித்திருக்கிறார். இவர் இந்திய ரெஸ்ட்லிங் ஹீரோ, 'தி கிரேட்' காளி-யின் நெருக்கமான நண்பரும் கூட. இன்னும் சொல்லப்போனால், காளி இவரிடம் தமிழ் கற்றுக் கொடுக்கச் சொல்லி கேட்கும் அளவுக்கு நெருக்கமானவர்கள். இந்த யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த போது ஜெய் ஜாக்சன் கூறியிருக்கிறார்.
கனவு, லட்சியம்
அதுமட்டுமின்றி, இவர் கொரோனா குறித்து அறிவுரை கூறவும் தவறவில்லை. நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கும் போது, ஏன் வீட்டை விட்டு வெளியே வரணும்? வந்து போலீசிடம் அடி வாங்க வேண்டும்? என்று தனது வேதனையை பதிவு செய்திருக்கிறார். மேலும், WWE-ல் ஒரு சாம்பியன்ஷிப் ஆக வேண்டும் என்பதே தனது லட்சியம் என்றும் கூறியிருக்கிறார்.
ஆனால், இதில் கொடுமை என்னவென்றால், இன்னமும் இவரை பேருக்கு யாரென்றே தெரியவில்லை என்பது தான்.