கடைசி ஒலிம்பிக்
ரியோ ஒலிம்பிக்தான் எனது கடைசி ஒலிம்பிக். 2020 ஒலிம்பிக் போட்டி வரை தொடர்ந்து தடகளத்தில் பங்கேற்பது என்பது மிகக் கடினமானது. மேலும் 4 ஆண்டுகள் எனது உத்வேகம் குறையாமல் பார்த்துக் கொள்வது என்பது இயலாத விஷயம். எனவே 2017-இல் லண்டனில் நடைபெறவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியோடு ஓய்வு பெறுவது நல்லது என்று கூறியுள்ளார் உசைன் போல்ட்
ரியோவில் தங்கம்
ரியோ ஒலிம்பிக்கில் 3 தங்கப் பதக்கங்களை (100 மீ., 200 மீ., 4*100 மீ. தொடர் ஓட்டம்) வெல்ல வேண்டும் என்பதே எனது மிகப்பெரிய கனவு. அதைத்தான் நான் விரும்புகிறேன். அதன் மீதுதான் எனது கவனம் உள்ளது. அதுதான் எனது லட்சியமும் என்கிறார் போல்ட்.
வரலாற்று சாதனை
நான் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக 200 மீ. ஓட்டத்தில் 19 விநாடிகளுக்குள் இலக்கை எட்டிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துவிட வேண்டும் என்ற கனவும் எனக்குள் இருக்கிறது. எப்படியாவது 19 விநாடிகளுக்குள் இலக்கை எட்டிவிட வேண்டும்.
சாதனை படைப்பேன்
அந்த இலக்கை அடைய முயற்சிகளை எடுக்க விரும்புகிறேன். அதுவும் எனது லட்சியங்களில் ஒன்று. நான் மிகமிக விரும்பும் விஷயமும் அதுதான். அதுபற்றி நான் எப்போதுமே பேசி வந்திருக்கிறேன். அந்த சாதனையை படைப்பதற்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் உசைன் போல்ட்.
சாதனை வீரர்
தனது 15வது வயதில் இரண்டு ஜீனியர் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள போல்ட், தனது 17வது வயதில் 200 மீ ஓட்டத்துக்கு 20 நிமிடங்களுக்கு குறைவாக எடுத்துக்கொண்ட முதல் வீரரானார்.
|
ரசிகர்களைக் காண அழைப்பு
உசைன் போல்ட் பல உலக சாதனைகளை தன்வசம் வைத்துள்ளார். தற்போது அவர் தனது மூன்றாவது ஒலிம்பிக்கில் புதிய சாதனை படைக்க ஆர்வத்துடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த ஒலிம்பிக் தன்னுடைய கடைசி ஒலிம்பிக் என்று கூறும் உசைன், தனது ரசிகர்களை போட்டிகளைக் காண அழைக்கிறார்.
ஓடி வாருங்கள்
உசைன் போல்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் பேசிய வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் தடகளப் போட்டிகள் தொடங்க இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், போட்டியை காண தங்களது குழந்தைகளுடன் பிரேசிலுக்கு வாருங்கள் எனவும், உங்களுக்கான டிக்கெட்டுகளை விரைவில் பெறுங்கள் எனவும் அழைத்துள்ளார்.
ரசிகர்கள் வருவார்களா?... டிவியில் மட்டுமே கண்டு ரசிப்பார்களா?