
ரியா பிள்ளை
வழக்கும் மும்பை கோர்ட்டில் நடந்து வருகிறது. குழந்தையின் பராமரிப்புக்காக ஏற்கனவே செலவிட்ட ரூ. 42.37 லட்சம் ரூபாய், குழந்தையின் பராமரிப்புக்காக மாதத்துக்கு ரூ.2.62 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று ரியா பிள்ளை கேட்டிருந்தார்.

செட்டில்மென்ட்
இதைத் தவிர, ஒருமுறை செட்டில்மென்ட் தொகையாக, ரூ.10 லட்சம் கேட்டிருந்தார். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ரியா பிள்ளை புதிய மனு தாக்கல் செய்தார்.

ஜீரோ மறந்து போச்சு
தனது செட்டில்மென்ட் தொகையில், ஒரு ஜீரோவை சேர்க்க மறந்துவிட்டேன். எனக்கு ரூ.1 கோடி தர வேண்டும் என்று கோர்ட்டில் ரியா பிள்ளை கூறியுள்ளார்.

மறதி தந்தை
குழந்தை இருப்பதையே மறந்து விட்ட, மறதி தந்தை என்று பயஸை குறிப்பிட்டிருந்த ரியா பிள்ளை, ஒரு ஜீரோவை மறந்ததாகக் கூறியுள்ளது, பயஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











