டெல்லி: இக்கட்டான நேரத்தில் பிவி சிந்து கைகொடுக்க, ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி தோல்வியில் இருந்து தப்பியது.
ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் மலேசியாவின் அலோர் செட்டார் நகரில் நேற்று துவங்கியது. இதில் மகளிர் பிரிவில் மொத்தம் 13 அணிகள் பங்கேற்கின்றன. மூன்று பிரிவுகளில் தலா 3 அணிகளும் ஒரு பிரிவில் 4 அணிகளும் இடம்பெற்றுள்ளன. டபிள்யூ பிரிவில் இந்தியா, ஜப்பான், ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன.