ஆய்வு நடத்துவோம்
இதுகுறித்து மும்பை கிரிக்கெட் சங்க துணை தலைவர் வினோத் தேஷ்பாண்டே கூறுகையில், ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்வது எங்கள் வழக்கம். ஸ்காலர்ஷிப்பை தொடர வேண்டுமானால் சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்த வேண்டும்.
ஆட்டம் மேம்படனுமே
கடந்த ஓராண்டில் குறிப்பிடத்தக்க அளவுக்கான ஆட்டத்தை பிரணாவ் தனவாடே வெளிப்படுத்தவில்லை. அதிலும் கடந்த ஆறுமாதங்களாக அப்படி எதுவுமே இல்லை. எனவேதான் ஸ்காலர்ஷிப் நிறுத்தப்பட்டுள்ளது. 10 வயதுக்குட்பட்டோர் கோடை கேம்ப் ஆட்டத்தொடரில் பிரணாவ் தனவாடே 70 ரன்கள் மட்டுமே எடுத்தார். இருப்பினும் பிரணாவ் தனவாடே செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்து வருகிறோம். அவர் சிறப்பாக ஆடினால், ஸ்காலர்ஷிப் திரும்பவும் வழங்கப்படும் என்றார்.
இங்கிலாந்து பயணம்
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான, வினோத் தேஷ்பாண்டே இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்கு தயாராகி வருகிறார். அங்கு நடைபெறும் ஃப்ரெண்ட்லி சுற்றுப் பயணத்தில் அவர் பங்கேற்கிறார். முன்னதாக தனது ஆட்ட நேர்த்தியை மேம்படுத்திக்கொள்ள தீவிர பயிற்சிகளுக்கு உள்ளாகினார் அவர்.
முக்கியமான தொடர்
இதுகுறித்து வினோத் தேஷ்பாண்டே தந்தை, பிரசாந்த் கூறுகையில், "திலிப் வெங்சர்க்கார் கிரிக்கெட் அகாடமிதான் முழு செலவையும் ஏற்று, எனது மகனை இங்கிலாந்து அழைத்துச் செல்கிறது. இதில் சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கிறேன். அப்படி ஆடினால்தான் அவரால் ஜூனியர் அளவிலான கிரிக்கெட் போட்டி தேர்வின்போது அணியில் இடம் பிடிக்க முடியும். ஸ்காலர்ஷிப்பையும் திரும்ப பெற முடியும்" என்றார்,
|
சச்சின் மகன்
கடந்த வருடம், 16 வயதுக்குட்பட்டோருக்கான மேற்கு பிராந்திய கிரிக்கெட் தொடருக்கான அணியில், வினோத் தேஷ்பாண்டேக்கு இடம் கிடைக்கவில்லை. அதேநேரம், சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு இடம் கிடைத்தது. இது சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில், வினோத் தேஷ்பாண்டேவுக்கு ஸ்காலர்ஷிப் நிறுத்தப்பட்டுள்ளது. உடனே, சச்சின் மீது உங்கள் சந்தேகப்பார்வையை திருப்ப வேண்டாம். கிரிக்கெட்டின் ஜென்டில்மேனான சச்சின், நிஜ வாழ்க்கையிலும் அவ்வாறுதான் நடப்பார் என்பதே அவரின் ரசிகர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. திறமையை காட்டி தேஷ்பாண்டே முன்னுக்கு வர வாழ்த்துவதே நம்மால் முடிந்தது.