
சாலையோரம் மூதாட்டி மீது பாய்ந்தது
தேசிய நெடுஞ்சாலையில் கங்கல் என்ற பகுதியில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆஷாதய் என்ற 67 வயது மூதாட்டி மீது மோதியது. இதில் அந்த மூதாட்டி படுகாயமடைந்தார்.

ரஹானே தந்தை கைது
மூதாட்டி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதனால், மதுகர் பாபுராவை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல பிரிவுகளில் வழக்கு
கோல்காபூர் போலீசார், மதுகர் பாபுராவ் மீது 304ஏ, 337, 338, 279 மற்றும் 184 ஆகிய இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மெத்தனம்தான் இந்த விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ரஹானே குடும்பம்
இந்த சம்பவத்தை பார்த்துவிட்டு, ரஹானே குடும்பத்திற்கு இப்போது மொத்தமாக நேரம் சரியில்லை என்கிறார்கள் ரசிகர்கள். ரஹானே இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரன் சேகரிக்க திணறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











