ரிவ்யூ கேட்ட ஆண்டர்சன்
நேற்றைய ஆட்டத்தில், ஆண்டர்சன் கோலிக்கு பந்து வீசினார். அப்போது, கோலி கால்களில் பந்து பட்டது. ஆண்டர்சன் நடுவரிடம் அவுட் கேட்டார். நடுவர் மறுக்கவே, ரிவ்யூவுக்கு சென்றது இங்கிலாந்து.
நடுவர் மீண்டும் மறுப்பு
ரிவ்யூ முடிவில், பந்து அவுட்-சைட் ஆப் ஸ்டம்ப்புக்கு வெளியே லேசாக சென்றதால், கள நடுவரின் முடிவுக்கே விட்டுவிடுவதாக மூன்றாவது நடுவர் தெரிவித்தார். கள நடுவராக இருந்த குமார் தர்மசேனா அவுட் கொடுக்க மறுத்துவிட்டார்.
கோபமடைந்த ஆண்டர்சன்
இதை கண்ட ஆண்டர்சன் கோபமடைந்தார். பின் நடுவரிடம் இருந்து தன் தொப்பி மற்றும் உடைகளை வேகமாக பிடுங்கினார் ஆண்டர்சன். அதோடு, நடுவரிடம் கோபமாக பேசியுள்ளார். விக்கெட் கொடுக்க மறுத்ததற்கு தன் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
ஆண்டர்சனுக்கு தண்டனை
இந்த செயல், ஐசிசி விதிகள் படி தவறானது. நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்திற்காக 15 சதவீத சம்பளம் மற்றும் ஒரு தடைப் புள்ளி பெற்றார் ஆண்டர்சன். ஆண்டர்சன் இதை ஒப்புக்கொண்டதால் மேற்கொண்டு இதில் விசாரணை நடக்காது.