ஆலோசனை
பதவியேற்ற கையோடு, தனது வருங்கால திட்டங்களை செயல்படுத்த களமிறங்கியுள்ளார். இதற்காக வரும் ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் ஆலோசனை கூட்டத்திற்கு அவர் ஏற்பாடு செய்துள்ளார்.
பயிற்சியில் வீரர்கள்
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி தற்போது பெங்களூருவில் பயிற்சி எடுத்து வருகிறது. எனவே அங்கேயே ஆலோசனை கூட்டத்திற்கு கும்ப்ளே அழைப்புவிடுத்துள்ளார்.
பல தரப்புக்கும் அழைப்பு
இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோஹ்லி, ஒன்டே அணி கேப்டன் டோணி, ஜூனியர் அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தேசிய கிரிக்கெட் அகாடமியின் பயிற்சியாளர்கள் என பல தரப்பட்டோரையும் ஆலோசனைக்கு அழைத்துள்ளார் அனில் கும்ப்ளே.
எதிர்கால நலன்
ஆலோசனையின்போது, அனைத்து தரப்பும் தங்களது கருத்துக்களை கூறுமாறு கும்ப்ளே கேட்டுக்கொள்ள உள்ளார். இந்திய அணிக்கு வந்த பிறகுதான் அணி வீரர்களை மேம்படுத்த வேண்டும் என்ற வழக்கமான நடைமுறையில் இருந்து மாறுபட்டதாக உள்ளது கும்ப்ளே அணுகுமுறை. ஜூனியர் வீரர்கள், மாநில வீரர்களையும் தகுதியானவர்களாக மாற்ற வேண்டும், அதுதான் எதிர்காலத்தில் இந்திய அணிக்கு நல்லது என கும்ப்ளே நினைக்கிறார்.
கூட்டு முயற்சி
தனி ஒரு பயிற்சியாளரால் பெரிய மாற்றத்தை கொண்டுவர முடியாது என உணர்ந்துள்ள கும்ப்ளே, அனைத்து தரப்பு ஆலோசனையை கேட்டு, புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணி வீரர்களை இளம் வயது முதல் கிரிக்கெட்டுக்கு தயார்படுத்தும் பாணியில் கும்ப்ளேயின் திட்டங்கள் இருக்கப்போகிறது என்கிறார்கள் பிசிசிஐ வட்டாரத்தில்.