வெளியில் வந்த குறைகள்
இந்திய அணியானது உலக கோப்பையில் தோற்றுவிட்டது. கடும் விமர்சனங்கள் எழுந்தன. மிடில் ஆர்டரில் ஏற்பட்ட குழப்பம், தோனியின் செயல்பாடு என குறைகள் வெளியில் வந்தன. அதற்கு காரணம், அணியின் தேர்வுக்குழுவே என்றும் கருத்துகள் முன் வைக்கப்பட்டன.
மொத்தம் 13 போட்டிகள்
தேர்வுக்குழு தலைவராக எம்எஸ்கே பிரசாத் உள்ளிட்டோர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. அவரது தலைமையிலான தேர்வுக்குழு உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக 13 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடிய அனுபவம் பெற்றவர்கள். ஏற்கனவே விமர்சிக்கப்பட்ட இந்த நிகழ்வுக்கு எம்எஸ்கே பிரசாத் பதில் கொடுத்துவிட்டார்.
கும்ப்ளே சரியானவர்
இந்நிலையில் அனில் கும்ப்ளே தேர்வுக்குழு தலைவராக வேண்டும் என்று சேவாக் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு அனில் கும்ப்ளே பொருத்தமான நபர்.
ஆஸ்திரேலிய தொடர்
கும்ப்ளே, சச்சின், கங்குலி, டிராவிட் போன்றோர்களுடன் ஒரு வீரராகவும், இளைஞர்களிடம் பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார். 2007-08-ம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரின்போது, ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
ஊதியம் அதிகம் வேண்டும்
அப்போது, கேப்டனாக இருந்த கும்ப்ளே என்னுடைய அறைக்கு வந்து, அடுத்த 2 தொடரில் அணியில் இருந்து நீக்கப்பட மாட்டீர்கள் என்றார். இதுபோன்ற நம்பிக்கை அளிக்கும் பதிலை அளிக்க கூடியவர். அவர் இப்போது தேவை. அதே நேரத்தில் அவர்களுக்கான ஊதியத்தையும் உயர்த்த வேண்டும் என்றார்.