வெஸ்ட் இண்டீஸ் டூர்
இந்த தொடர் வரும் ஜூலை 22ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 2ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. முன்னணி வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளதால், ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட படை உருவாக்கப்பட்டுள்ளது.
கேப்டன்சி மாற்றம்
இந்தாண்டு இந்திய அணியை வழிநடத்தப்போகும் 8வது கேப்டன் ஷிகர் தவான் ஆகும். இப்படி மாதத்திற்கு ஒரு கேப்டன் என மாற்றினால் இந்திய அணியின் எதிர்காலம் என்ன ஆகும், வீரர்களின் புரிதல் எப்படி இருக்கும் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். பிசிசிஐ இதற்கு நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும் எனக்கோரிக்கை வலுத்து வருகிறது.
கங்குலியின் விளக்கம்
இந்நிலையில், இதுகுறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி பேசியுள்ளார் அதில், "இவ்வளவு குறுகிய நாட்களில் 7 கேப்டன்களை மாற்றியது சிறந்த முடிவல்ல என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் தான் இது நடந்துவிட்டது. இதுதான் உண்மையான காரணம்.
பிரச்சினை எங்கு?
தென்னாப்பிரிக்கவுடனான தொடரில் ரோகித் சர்மா கேப்டன்சி செய்ய தயாராக இருந்த போது காயமடைந்தார். இதனால் கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன்பின் இந்தியாவில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுடனான தொடரில் கே.எல்.ராகுலும் காயத்தால் பாதிக்கப்பட்டார்.
டிராவிட்டின் பரிதாபம்
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மாவுக்கு கொரோனா வந்ததற்கு யாரையும் குறை சொல்ல முடியாது. இப்படி கேப்டன்கள் மாற்றபட்ட போது, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் நிலைமை தான் கவலையளிக்கிறது. புது புது கேப்டன்களுடன் அவர் பணியாற்றி வருவது மிகவும் இக்கட்டான சூழலாகும் என கங்குலி கூறினார்.