
நம்ம வீட்டு பிள்ளை
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்தவராக இருந்தாலும், சென்னை அவருடைய இரண்டாவது வீடு. நம்ம வீட்டுப் பிள்ளையாக கொண்டாடப்படும் தல டோணியை, கழட்டிவிடுவதற்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் முயற்சி செய்தது என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால் அது நடந்தது.

ரூ.6 கோடிக்கு ஏலம்
2008ல் முதல் ஐபிஎல் போட்டிக்கான அணியைத் தேர்வு செய்வதற்கு ஏலம் நடந்தது. அப்போது, 15 லட்சம் டாலர்கள், அதாவது, ரூ.6 கோடிக்கு டோணியை சிஎஸ்கே ஏலம் எடுத்தது. அந்த சீசனில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் டோணிதான்.

டோணி வேண்டாம்
ஏலத்துக்கு முன்பாக, அணியின் உரிமையாளர் என்.ஸ்ரீனிவாசன், அணி தேர்வு குழுவினருடன் பேசினார். எப்படியாவது, வீரேந்திர சேவாக்கை ஏலம் எடுங்கள். அவர்தான் சிஎஸ்கே கேப்டனாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். சிஎஸ்கே அணி தேர்வு குழுவின் தலைவரான முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர், டோணியை எடுக்கலாம் என்றார். அவர் நமக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.

அதிக விலைக்கு வேண்டாம்
வடிவேலு ஜோக் போலில்லாமல், சந்திரசேகர் காரணத்தை கூறியபோதும், அரை மனதுடன் ஸ்ரீனிவாசன் ஒப்புக் கொண்டுள்ளார். ஏலத்தின்போது, 18 லட்சம் டாலர் வரை டோணியின் விலை இருக்கும் என்று கூறப்பட்டது. 15 லட்சம் டாலர் வரை எடுக்கலாம். அதற்கு மேல் வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

சிஎஸ்கேவுக்கு கிடைத்தார்
காரணம், அணிக்கு 50 லட்சம் டாலர் தான் பட்ஜெட். அதில் 15 லட்சம் டாலர் டோணிக்கு போனால், மீதி பணத்தில் மற்ற வீரர்களை தேர்வு செய்யலாம் என்று கணக்கிட்டுள்ளனர். ஆனால் ஸ்ரீனிவாசனின் அதிர்ஷ்டம், அணிக்கு டோணி கிடைத்தார். இதை சந்திரசேகர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். டோணி இல்லாத சிஎஸ்கே அணியை ஸ்ரீனிவாசன் உள்பட அணி நிர்வாகம் நினைத்து பார்க்க முடியுமா? தலக்கு ஒரு பெரிய விசில் போடுங்க.


Click it and Unblock the Notifications











