4ம் வரிசைக்கு தீர்வு
இந்திய அணியின் சிக்கலாக பார்க்கப்பட்ட 4ம் வரிசைக்கு தீர்வு காணும் வகையில் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டுள்ளார். மாற்று விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தான் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சொதப்பியதால் தினேஷ் கார்த்திக் எடுக்கப்பட்டிருக்கிறார்.
ரிஷப் பன்ட் இல்லை
20 ஓவர் போட்டிகளுக்கு மட்டுமே எடுக்கப்பட்டதால் ரிஷப் பன்ட்டுக்கான வாய்ப்பே இருப்பதாக தெரிந்தது. இந்நிலையில், ரிஷப் பன்ட்டை தள்ளி வைத்துவிட்டு தினேஷ் கார்த்திக்கை அணியில் எடுத்துள்ளனர்.
தேர்வுக்குழு விளக்கம்
இதுகுறித்து தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: மாற்று விக்கெட் கீப்பர் யார் என்பது குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.
அனுபவம் வாய்ந்தவர்
கடைசியில் ரிஷப் பன்ட்டை விட தினேஷ் கார்த்திக் அனுபவம் வாய்ந்தவர்... நல்ல விக்கெட் கீப்பர் என்பதால் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தோனி ஆடாதபட்சத்தில் தான் மாற்று விக்கெட் கீப்பர் களமிறக்கப்படுவார்.
விக்கெட் கீப்பிங் முக்கியம்
அப்படியிருக்க கூடிய நேரத்தில் உலக கோப்பை என்பது முக்கியமான தொடர். எனவே... விக்கெட் கீப்பர் சிறப்பாக செயல்பட வேண்டும். அந்த ஒரு காரணத்திற்காக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றார்.