சில முறை ஆலோசனை
2015 உலகக் கோப்பைக்கு முன்பு டோணியை கேப்டன் பதவியிலிருந்து நீக்குவது குறித்து யோசிக்கப்பட்டது. ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அதுகுறித்து முடிவெடுக்காமல் இருந்தோம். காரணம் உலகக் கோப்பைப் போட்டியின்போது கேப்டனை நீக்கினால் சரியாக இருக்காது என்பதால்.
புது கேப்டன் செட்டாக காலம் பிடிக்கும்
புதிதாக கேப்டனை நியமித்தால் அவர் செட்டாக சில காலம் பிடிக்கும். ஆனால் நம்மிடம் காலம் குறுகியதாக இருந்தது. எனவே கேப்டனை மாற்றுவது சரியான முடிவாக இருக்காது என்று நம்பினோம். இருப்பினும் டோணியின் கேப்டன் பதவி பறிப்பு என்பது குறித்து தொடர்ந்து ஆலோசித்து வந்தோம்.
விராத் மீது எனக்கு நம்பிக்கை
விராத் கோஹ்லியிடம் கேப்டன் பதவியை கொடுக்கலாம், அது சரியாக இருக்கும் என நான் நம்பினேன். அவரால் ஒரு நாள் போட்டியில் இந்தியாவை சிறப்பாக கொண்டு செல்ல முடியும் என நம்பினேன். இருப்பினும் தேர்வுக் குழு ஒரு மனதாக அதுகுறித்து முடிவெடுக்காமல் இருந்தது.
டோணி முடிவு ஷாக் கொடுத்தது
ஆனால் டோணி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து திடீரென ஓய்வை அறிவித்தது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம் அப்போது இந்திய அணி நெருக்கடியான ஒரு தொடரை சந்தித்துக் கொண்டிருந்தது. மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலின் கேப்டன் என்று நான் டோணியைக் கூற மாட்டேன். காரணம், எல்லாமே நமக்கு சாதகமாக அப்போது இல்லை.
அது அவரது முடிவு
மிகவும் முக்கியமான கட்டத்தில் சீனியர் ஒருவர் திடீரென விலகும் முடிவை எடுத்தால் அது நிச்சயம் அதிர்ச்சியானதுதான். இருப்பினும் அவரது முடிவை நாம் மதிக்க வேண்டும். அந்த அடிப்படையில் டோணி முடிவையும் நாங்கள் மதித்தோம்.
கம்பீர், யுவராஜ் நீக்கத்திற்கு டோணி காரணமல்ல
இந்திய அணியிலிருந்து யுவராஜ் சிங், கம்பீர் ஆகியோர் நீக்கப்படுவதற்கு டோணிதான் காரணம் என்று கூறுவது தவறானது. அவருக்கும், இவர்களது நீக்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்களைத் தேர்வு செய்வதற்கு எப்போதுமே டோணி ஆட்சேபித்தது கிடையாது. அது முழுக்க முழுக்க தேர்வுக் குழுவின் முடிவுதான். டோணிக்குத் தொடர்பில்லை என்றார் பாட்டீல்.