மும்பை: ஆஸ்திரேலிய ஏ அணியுடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடும் இந்திய ஏ அணிக்கு செடேஸ்வர் புஜாரா கேப்டனாக செயல்படுவார்.
இளைய தலைமுறையினரின் திறமையை வளர்ப்பதற்காக இந்திய கிரிக்கெட்டின் ஏ அணி ஆஸ்திரேலிய ஏ அணியுடன் மோத ஷெடியூல் உருவாக்கப்பட்டுள்ளது. ஜூலை 22-25 வரையிலும், ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 1 வரையிலும், சென்னையில் இரு ஆட்டங்கள் நடக்கும். ஒவ்வொன்றும், 4 நாட்கள் கொண்ட ஆட்டங்களாக இருக்கும்.
இந்த அணிக்கு தலைமை வகிக்க உள்ள, புஜாரா, இந்திய அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய 27 வயது வீரர். கர்நாடகாவின் லோகேஷ் ராகுல், மும்பையின் ஷ்ரேயாஸ் ஐயர், திழக ஆப்-ஸ்பின்னர் பாபா அபரஜித், மற்றும் ஷர்துல் தாகூர் போன்ற இளம் திறமையான வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
உமேஷ் யாதவ், வருண் ஆரோன், அமித் மிஷ்ரா மற்றும் பிரக்யான் ஓஜா ஆகிய அனுபவ வீரர்கள் பவுலிங் துறையை பார்த்துக்கொள்ள உள்ளனர்.