சூடுபிடித்த சர்ச்சை
இந்த சூழலில் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி திடீரென விலகுவதாக அறிவித்தார். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிற்கு ஒரே கேப்டன் இருந்தால் நல்லது என பிசிசிஐ கருதியது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டின் கேப்டன்சியில் இருந்தும் விலகியதால், விராட்டிற்கும் - பிசிசிஐ-க்கும் இடையே நடக்கும் பிரச்சினை மேலும் தீவிரமடைந்துள்ளது என தெளிவாக தெரிகிறது.
ரவிசாஸ்திரி பேச்சு
இந்த பிரச்சினையில் விராட் கோலிக்கு ஆதரவாக முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கருத்து தெரிவித்தார். அதில், உலகக்கோப்பை வென்றுக்கொடுத்தால் தான் சிறந்த வீரரா?.. அப்படியென்றால் கங்குலி, டிராவிட் ஆகியோரெல்லாம் எந்த உலகக்கோப்பையை வென்றார்கள்? அவர்கள் சிறந்த வீரர்கள் இல்லையா? என சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.
கபில் தேவ் கோபம்
இந்நிலையில் முன்னாள் வீரர் கபில் தேவ்-ம் கொந்தளித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், முதலில் விராட் கோலி செல்போன் அழைப்பை ஏற்று, பிசிசிஐ-யிடம் பேச வேண்டும். அவர்களுக்குள் இருக்கும் மனக்கசப்பை சரிசெய்யுங்கள். தனிப்பட்ட கோபங்களை விட நாடும், தேசத்திற்கான அணியும் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள், அனைத்து பிரச்சினைகளும் சரியாகிவிடும் .
என்னதான் தீர்வு
நான் கேப்டனாக பதவியேற்ற போது, தேவையான அனைத்து விஷயங்களும் செய்துக்கொடுக்கப்பட்டது. ஆனால் எப்போதுமே அதே போன்று இருக்காது. அதற்காக கேப்டன்சியை விட்டு விலக வேண்டுமெ என்று அர்த்தமல்ல. விராட் கோலியின் நிலையும் அதே தான். என்னைப் பொறுத்தவரையில் விராட் இனி சிறந்த பேட்ஸ்மேனாக ரன்களை குவிக்க வேண்டும் என கபில்தேவ் பேசியுள்ளார்.