டெல்லி : முன்னாள் இந்திய வீரர் கவாஸ்கர் இங்கிலாந்தில் சொதப்பி வரும் இந்திய அணியை தொடர்ந்து காய்ச்சி எடுத்து வருகிறார். முதலில் இருந்தே பல தவறுகளை சுட்டிக் காட்டினார் கவாஸ்கர்.
ஆனால், அது எதையும் கருத்தில் கொள்ளாத இந்திய அணி நிர்வாகம், தன் விருப்பப்படி வீரர்களை தேர்வு செய்தது. பயிற்சிகளுக்கான திட்டமிடலும் சரியாக இல்லை. முன்பு கவாஸ்கர் மட்டுமே விமர்சித்த நிலையில், இரண்டு போட்டிகளில் தோற்றுவிட்டதால், தற்போது அனைத்து பக்கங்களில் இருந்தும் கடும் விமர்சனம் வருகிறது.