இப்போது சரியாகி விட்டது
இந்த நிலையில் தற்போது டோணிக்கு தசைப் பிடிப்பு குணமாகியுள்ளது. அவர் விளையாடும் நிலையில் உள்ளதாகவும், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அணி மேலாளர் நிஷாந்த் அரோரா கூறியிருந்தார்.
குணமடைந்தார்
டோணி நன்கு குணமடைந்து வருகிறார். போட்டிக்கு முன்பாக அவரது உடல் நிலை பரிசோதிக்கப்படும். அதன் பின்னர் அவர் ஆடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறியிருந்தார் அரோரா.
டோணி முக்கியம்.. கோஹ்லி
இதற்கிடையே, விராத் கோஹ்லி கூறுகையில், டோணி இந்திய அணியின் நடுக்களத்திற்கு மிகவும் முக்கியமானவர், தூண் போன்றவர். பார்த்திவ் படேல் அணியில் சேர்க்கப்படுவதாக இருந்தால் எங்களது பேட்டிங் ஆர்டரிலும் மாற்றம் செய்ய வேண்டி வரும் என்றார்.
டோணி இல்லாட்டி என்ன - மொர்தஸா
இதற்கிடையே, வங்கதேச கேப்டன் மஷ்ரேப் மொர்தஸா கூறுகையில், இந்திய அணி மிகவும் வலுவான பேட்டிங் ஆர்டரைக் கொண்டது. டோணி இல்லாவிட்டாலும் கூட அது வலுவானதே என்றார் அவர்.
டோணி இடம் பெற்றார்
இந்த நிலையில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கிய போட்டியில் டோணியும் இடம்பெற்றார். இதனால் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.