பெங்களூரு: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் விளையாடி வரும் இந்திய அணியைச் சேர்ந்த நான்கு பேர், ஐபிஎல் போட்டிக்காக அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் 11வது சீசனுக்கான வீரர்களை ஏலம் எடுப்பது பெங்களூரில் நடந்தது. இதில் போட்டி போட்டு ஒவ்வொரு அணியும் வீரர்களை ஏலம் எடுத்தன.
இதில், நியூசிலாந்தில் நடக்கும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் விளையாடும் நான்கு வீரர்கள் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.