
என்ன முக்கியம்
இந்திய அணியில் இதனால் தற்போது புதிய வீரர்கள் இடம்பிடிப்பது என்பது மிகவும் கடினமான காரியமாக மாறி இருக்கிறது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள், ஒன் டவுன் கோலி, 4வது இடத்தில் கே எல். ராகுல், 6 வது இடத்தில் தோனி, 7வது இடத்தில் பாண்டியா என்று எல்லோரும் நல்ல பார்மில் உள்ளனர்.

ஆனால் என்ன
ஆனால் இன்னும் 5 வது இடத்திற்கான வீரர்தான் முழு பார்மிற்கு திரும்பவில்லை. ஐந்தாவது இடத்தில் ஆடி வரும் கேதார் ஜாதவ் மிகவும் அதிர்ஷ்டம் உள்ள நபர். இவர் ஆடும் போட்டிகள் அனைத்திலும் இந்தியா எப்படியாவது வென்றுவிடும். ஆனால் இந்த உலகக் கோப்பை தொடரில் இவர் சரியாக விளையாடவில்லை.

ஏன் இல்லை
இவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக போட்ட ஒரே ஓவரில் அவரது பவுலிங்கை வீரர்கள் பறக்கவிட்டார்கள். ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருந்த நேரம் பார்த்து இவர் வந்த வேகத்தில் ரன்களை அள்ளிக்கொடுத்தார். மொத்தம் 14 ரன்களை ஒரே ஓவரில் கொடுத்தார். கடந்த இரண்டு போட்டியிலும் இவர் பேட்டிங் செய்ய பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.

வேறு என்ன மாற்றம்
இதனால் அவரின் இடத்தில் தற்போது விஜய் சங்கர் களமிறங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். நாளை மறுநாள் நியூஸிலாந்திற்கு எதிராக நடக்கும் போட்டியில் விஜய் சங்கர் களமிறங்க வாய்ப்புள்ளது. அதேபோல் தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பிடிக்கவும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

எப்படி பிடிப்பார்
தற்போது தவான் இடது கையில் பெருவிரலில் காயம் பட்டு இருக்கிறார். இதனால் அடுத்த ஒரு போட்டியில் மட்டும் அவர் விளையாடுவது சந்தேகம் என்கிறார்கள். இதனால் அவரின் இடத்தில் கேஎல் ராகுல் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

அங்குதான்
கே எல் ராகுல் களமிறங்கும் நான்காவது இடத்தில் தினேஷ் கார்த்திக் இறங்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. வருகிற போட்டிக்குள் தவான் தனது உடல் தகுதியை நிரூபிக்கவில்லை என்றால் இந்த மாற்றங்கள் எல்லாம் நடக்கும் என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











