புஜாராவின் பேச்சு
தென்னாப்பிரிக்க தொடர் தொடங்கவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த புஜாரா, இந்திய அணி வெற்றி பெறும், ஆனால் அது என் கையில் மட்டும் இல்லை. பந்துவீச்சாளர்கள் கையில் தான் இருக்கிறது. அவர்கள் தான் 20 விக்கெட்டுகளையும் எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அதாவது அணியின் வெற்றிக்கு பேட்ஸ்மேன்களுக்கு இப்போது வேலை இல்லை என்பது போல் அவரது பேச்சு அமைந்தது.
கோல்டன் டக்
அவர் சொன்னது போல், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் களமிறங்கிய புஜாரா, எதிர்கொண்ட முதல் பந்திலே அழகாக ஷாட் லேக்கில் நின்றவரிடம் கேட்ச் கொடுத்து கோல்டன் டக்காகி பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் இந்திய டெஸ்ட் அணி வரலாற்றில் , மூன்றாவதாக இறங்கும் நபர் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற சோகமான சாதனையை புஜாரா படைத்தார்.
பி.சி.சி.ஐ. கோபம்
புஜாராவின் இந்த சொதப்பல், பி.சி.சி.ஐ.யும் சேர்த்து வெறுப்படைய செய்து இருக்கும். ஏனென்றால் போட்டி தொடங்குவதற்கு முன் புஜாராவுக்கு பி.சி.சி.ஐ. ஒரு கடிதம் எழுதியிருந்தது. அதில், இந்த தொடரில் புஜாரா சிறப்பாக ஆடிய தீர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டி இருந்தது.
அடுத்தது என்ன?
ஆனால், நம் புஜாரா நீ என்ன சொல்றது, நான் என்ன கேட்கிறது என்ற பாணியில் விளையாடுகிறார். ஏற்கனவே விஹாரி, ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருந்த நிலையில், புஜாரா மீண்டும்.. மீண்டும் ஏமாற்றுவது காண்போரை எரிச்சலடைய செய்கிறது.