|
இந்திய அணி மரியாதை
பிசிசிஐ இது குறித்து தெரிவித்துள்ள செய்தியில், "புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்கள் மற்றும் ஆயுதப் படைகளை குறிப்பிடும் வகையில் இந்திய அணி இன்று ராணுவ வீரர்களுக்கான தொப்பியை அணிந்து விளையாட உள்ளது" என குறிப்பிட்டுள்ளது.
போட்டி சம்பளம்
மேலும், இன்றைய போட்டிக்கான சம்பளத்தை வீரர்கள் தீவிரவாத தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களின் கல்வி செலவுக்கும் வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
தோனி தான் கூறினார்
வீரர்களுக்கான தொப்பி அணியும் முடிவை தோனி தான் தெரிவித்தார் என கூறப்படுகிறது. இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கலோனல் ஆக கௌரவ பதவியில் இருக்கும் தோனி, தான் வீரர்களுக்கு இந்த சிறப்பு தொப்பியை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
|
வர்ணனையாளர்கள்
மேலும், வர்ணனை செய்து கொண்டிருந்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர், சுனில் கவாஸ்கர், முரளி கார்த்திக், ஹர்ஷா போக்ளே உள்ளிட்டோரும் இதே தொப்பியை அணிந்தனர்.