
டெல்லி: தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியை துவம்சம் செய்து திரும்பியுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அடுத்ததாக, ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது.
தென்னாப்பிரிக்கா சென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 3 ஒருதினப் போட்டித் தொடரை 2-1 என்று வென்றது. அதற்கடுத்து 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 3-1 என வென்றது. இதன் மூலம் முதல் முறையாக தென்னாப்பிரிக்காவில் இரண்டு தொடர்களை வென்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது.
