ஹர்பஜன் சிங் ஓவர்
இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. மும்பை அணி ஒரு விக்கெட் இழந்து பேட்டிங் செய்து வந்தது. ஆறாவது ஓவரை ஹர்பஜன் சிங் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை மும்பை வீரர் ஈவான் லீவிஸ் அடிக்க முயன்றார்.
அவுட் கேட்கவில்லை
அந்த பந்து விக்கெட் கீப்பர் அம்பதி ராயுடு வசம் சென்றது. ஆனால், ரீப்ளேவில் பந்து லேசாக பேட்டில் எட்ஜ் ஆகி சென்றது தெரிந்தது. ஆனால், பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், விக்கெட் கீப்பர் அம்பதி ராயுடு என யாருமே அம்பயரிடம் அவுட் கேட்கவில்லை.
ராயுடு சொன்ன பதில்
ரீப்ளே பார்த்த பின் ஹர்பஜன் சிங், ராயுடுவிடம் ஏன் அவுட் கேட்கவில்லை என கேட்டார். ஆனால், ராயுடு தனக்கு காதில் கேட்கவில்லை. வேண்டுமென்றால், ஸ்லிப்பில் நின்ற வாட்சனிடம் கேளுங்கள் என கூறினார்.
தோனி இருந்தால்..
ஈவான் லீவிஸ் அப்போது 12 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். அப்போது வாய்ப்பு பெற்ற அவர், அடுத்து 32 ரன்கள் வரை சேர்த்தார். இதைக் கண்ட சென்னை அணியின் ரசிகர்கள், இந்த நேரத்தில் தோனி இருந்திருந்தால் அந்த விக்கெட்டை கேட்டிருப்பாரே என புலம்பிக் கொண்டே போட்டியை பார்த்தனர்.