|
ட்விட்டர் கேள்வி
விஷயம் இது தான். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் கொல்கத்தா - ஹைதராபாத் போட்டிக்கு முந்தைய நாள் ரசிகர்களிடையே தங்கள் வீரர்கள் குறித்த கேள்வி கேட்கப்பட்டு இருந்தது.
கேள்வி
அதாவது, கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை வந்தால் இவர்களில் நீங்கள் யாரை அனுப்புவீர்கள்? என்ற கேள்வியும் தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரஸ்ஸல், கார்லோஸ் ப்ராத்வைட், ரிங்கு சிங் என கேள்விக்கான விடையாக வீரர்கள் பெயர் இடம் பெற்று இருந்தது.
கடைசி ஓவரில்..
இந்த பதிவைப் போலவே, அடுத்த நாள் நடந்த கொல்கத்தா - ஹைதராபாத் போட்டியில் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில், ஆண்ட்ரே ரஸ்ஸல் அந்த ஓவரின் முதல் இரு பந்துகளை சந்தித்தார்.
|
போட்டி பிக்ஸிங்
அந்த போட்டியில் 3 ஓவர்களில் 53 ரன்கள் தேவை என இக்கட்டான சூழலில் ரஸ்ஸல் அதிரடியாக ஆடி அணியை மீட்டார். அந்த ட்விட்டர் பதிவின் நிலையை ஒற்று சில விஷயங்கள் போட்டியில் நடந்ததை ஒருவர் குறிப்பிட்டு, நகைச்சுவையாக ஐபிஎல் போட்டி பிக்ஸிங் என குறிப்பிட்டுள்ளார்.