107 கிலோ உடல் எடை
தீக்சனாவுக்கு கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை. காலம் மாற, கிரிக்கெட்டுக்கும் உடல் தகுதி ஒரு முக்கிய கருவியாக மாறிவிட்டது. இதனால் 2017, 2018ஆம் ஆண்டிலேயே அண்டர் 19 கிரிக்கெட்டில் தேர்வாகி, தீக்சனா ஒரு போட்டியல் கூட விளையாடவில்லை. அதற்கு காரணம் அவர் உடல் எடை தான்.
வாட்டர் பாய்
107 கிலோ உடல் எடை, மாமிச மலை போல் தோற்றம் இருந்ததால் தீக்சனாவுக்கு விளையாட வாய்ப்பே கிடைக்கவில்லை. எப்போதும் வாட்டர் பாயாக தான் தீக்சனாவை இலங்கை கிரிக்கெட் வாரியம் பயன்படுத்தி இருக்கிறது. தண்ணீர் எடுத்துக்கிட்டு ஓடு அப்போதாவது எடை குறையட்டும் என்று கிண்டல் வார்த்தையையும் தீக்சனா கேட்டுள்ளார்.
வலைப் பயிற்சி பவுலர்
இதனால் கடின உடல் பயிற்சி மூலம் தீக்சனா உடல் எடையை குறைத்துள்ளார். அதன் பின்னர் அவருக்கு வாய்ப்பு தேடி வந்தது. அடுத்தடுத்து வருடங்களில் இலங்கை அணியில் விளையாட வாய்ப்பு, டி20 உலககோப்பையில் களமிறங்க வாய்ப்பு என எல்லாம் கிடைத்தது. அதன் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வலைப் பயிற்சி பவுலராக கடந்த ஆண்டு இணைந்தார்
கனவுகள் மெயப்படும்
ஆனால், இம்முறை மெயின் அணியில் ஏலத்தில் தேர்வாகி தோனியின் துருப்பு சீட்டாக தீக்சனா விளங்குகிறார். இது குறித்து பேசிய தீக்சனா, தன்னம்பிக்கையுடன் போராடி, முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். கனவுகள் மெயப்படும் என்று கூறினார். திக்சனாவை சிஎஸ்கே தேர்வு செய்த போது, அதற்கு தமிழக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், தற்போது அவர் வெற்றி கண்டுள்ளார்.