அமித்ஷா வருகை
ஐபிஎல் இறுதிப் போட்டியை காண பிரதமர் மோடியும், அமித்ஷாவும் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்டம் தொடங்கி சில நிமிடங்கள் கழித்து தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது குடும்பத்தினருடன் வந்து போட்டியை ரசிகர்களுடன் அமர்ந்த கண்டு களித்தார். அதுவரைக்கும் நன்றாக விளையாடிய ராயல்ஸ், அமித்ஷா வந்ததும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அமித்ஷா மேஜிக்
பொதுவாக தேர்தலில் பா.ஜ.க. தொடர்ந்து வெற்றிகளை பெற்று வருகிறது. அதற்கு காரணம் அமித்ஷாவின் மேஜிக் தான் என்று பா.ஜ.க.வினர் புகழ்ந்து வருவது வழக்கம். அதே மாதிரி, அமித்ஷா வந்ததும் நன்றாக விளையாடிய ராஜஸ்தான் டக், டக்குனு விக்கெட்டுகளை பறிகொடுத்ததாக நெட்டிசன்கள் பதிவிட்டனர். இதனால் கிரிக்கெட்டிலும் அமித்ஷா மேஜிக் நிகழ்ந்துவிட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
ரசித்த அமித்ஷா
குஜராத் அணி விக்கெட் எடுக்கும் போது எல்லாம் அமித்ஷா அதனை கைத்தட்டி கொண்டாடினார். குஜராத் தனது சொந்த மாநிலம் என்பதால் அமித்ஷாவும் குஜராத்துக்கு தான் ஆதரவாக நேற்று மைதானத்துக்கு வந்திருந்தது தெளிவானது. போட்டி ஒடி கொண்டுக்கும் போது நிமிடத்திற்கு நிமிடத்திற்கு ஒரு முறை அமித்ஷாவை பெரிய திரையில் காட்டி கொண்டே இருந்தனர்.
Recommended Video
பிரதமர் மோடி வரவில்லை
எனினும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்காததற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே மைதானத்தில் ஒரு லட்சத்துக்கும் மேல் மக்கள் திரண்டு இருந்தனர். இந்த நேரத்தில் பிரதமரும் மைதானத்துக்கு வந்திருந்தால், மக்கள் வெளியேறும் போது சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் கூட தவிர்த்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.