மும்பை: கிரிக்கெட் உலகில் எதிரும்,புதிருமாக இருப்பவர்கள் தான் தோனியும், கம்பீரும். லக்னோவுக்கு எதிராக சிஎஸ்கே தோற்றது.
அப்போது கம்பீர் ஆரவாரமாக கத்தி வெற்றியை கொண்டாடினார். ஆனால் காலம் எப்படி மாறியது தெரியுமா?
சிஎஸ்கே நேற்றைய ஆட்டத்தில் வென்றால் தான் லக்னோ அணியால் புள்ளி பட்டியலில் முதல் 2 இடத்தை பிடித்திருக்க முடியும்.
புள்ளி பட்டியலில் முதல் 2 இடத்தை பிடித்தால் தான் பிளே ஆப் சுற்றில் சாதகமாக அமையும். முதலாம் குவாலிபையரில் மோதும் முதல் 2 அணிகளில் ஏவரேனும் தோற்றால் அந்த அணிக்கு குவாலிபையர் 2வில் வாய்ப்பு கிடைத்திருக்கும். இதனால் சிஎஸ்கே எப்படியாவது வெல்ல வேண்டும் என்று லேக்னோ அணி எதிர்பார்த்தது.
ஆனால் தோனியோ, நேற்று அணியில் பெரிய மாற்றத்தை ஏதும் செய்யவில்லை. அனுபவ வீரர்களையும் பெஞ்சில் அமரவைக்க, ராஜஸ்தான் அணியும் த்ரில் வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது. இதனால் லக்னோ அணி 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
தற்போது லக்னோ அணி எலிமினேட்டர் சுற்றில் விளையாடப் போகிறது. லக்னோவுக்கு எதிராக விளையாடப் போவது டெல்லியா அல்லது பெங்களூரு அணியா என்று இன்று தெரிந்துவிடும். சிஎஸ்கே அணி காப்பாற்றும் என எதிர்பார்த்த லக்னோ அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
அடுத்த ஆண்டும் விளையாடும் தோனி..சிஎஸ்கேக்கு பலன் தருமா.. சிஎஸ்கே சந்திக்கப்போகும் பிரச்சினைகள் என்ன?