
எதிர்பார்தத ரசிகர்கள்
ஆனால், கேஎல் ராகுல் மீது தற்போது ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஐபிஎல் தொடரில் ரன்களை அடித்த ராகுல், டி20 உலககோப்பையின் போது சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார். இம்முறை நல்ல பார்மில் இருந்த ராகுல், 208 ரன்கள் என்ற இலக்கை வெற்றிக்கரமாக துரத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.

43 பந்தில் அரைசதம்
ஆனால், ராகுல் வழக்கம் போல் மெதுவாக ரன்களை சேர்த்து ரசிகர்களை வெறுப்படைய செய்தார். 200 ரன்களுக்கு மேல் இலக்கு இருக்கும் போது தொடக்க வீரர்கள் தான் அதிரடியாக ரன்கள் குவித்திருக்க வேண்டும். ஆனால் ராகுல் 43 பந்துகளில் தான் அரைசதமே அடித்தார். ஒருவேலை ராகுல் இதனை ஒருநாள் போட்டி என நினைத்துவிட்டார் போலும். சூழலுக்கு ஏற்ப கேப்டன்கள் யுத்தியை மாற்றி விளையாட வேண்டும்.

ராகுல் Vs பட்டிடார்
ஆனால் ராகுல் ஆங்கர் ரோல் மட்டும் தான் செய்வேன் என்று தனது தனிப்பட்ட ஸ்கோரை மட்டும் உயர்த்தி, முக்கிய கட்டத்தில் ஆட்டமிழந்து லக்னோ ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார் கேஎல் ராகுல். கேஎல் ராகுலுக்கு பெரிய ஷாட்களை ஆட தெரியும். அதனை கடைசி கட்டத்தில் செய்யாமல், கொஞ்சம் முன்பாகவே அடித்து ஆடி இருக்கலாம். பட்டிதார் 54 பந்துகளில் 112 ரன்கள் விளாசி இருந்தார். ஆனால் ராகுல் 58 பந்துகளில் 79 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.

சிறந்த பேட்ஸ்மேன் யார்?
இதனால் அணி எப்படி வேண்டுமானாலும் போகட்டும் நான் 60 ரன்கள் அடித்துவிட்டு ஆட்டமிழந்து விடுவேன் என்று ராகுல் நினைத்துவிட்டாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சிறந்த வீரர் என்பவர் கடைசி வரை நின்று அணிக்கு வெற்றியை பெற்று தருவதே தவிர, 40 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழப்பது அல்ல. இதனால் ராகுலை டி20 இந்திய அணியிலிருந்து நீக்கிவிட்டு, அதிரடியாக ஆடக் கூடிய தொடக்க வீரரை கொண்டு வர வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











