மளமளவென ரன் குவிப்பு
பவர் பிளே ஓவர்களில் பஞ்சாப் அணி மிக மோசமான பீல்டிங் மற்றும் பந்துவீச்சு செய்ததால், ஹைதராபாத் அணி மளமளவென ரன்களை குவித்தது. முதல் 6 ஓவர்களில் மட்டும் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் அடித்தது ஹைதராபாத் அணி. அங்கிருந்து ஆட்டம் முழுமையாக ஹைதராபாத் அணி பக்கம் திரும்பியது.
சரிந்த விக்கெட்டுகள்
அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு கெயில் (4), மயங்க் அகர்வால் (27), பூரன் (21) போன்ற முன் வரிசை வீரர்கள் அனைவரும் வெளியேற, கே எல் ராகுல் மட்டுமே சற்று ஆறுதல் தரும் விதமாக ஆடினார். மறுமுனையில், கே எல் ராகுலுக்கு யாரும் சப்போர்ட் செய்யவில்லை.
165 ரன்கள்
மில்லர் (11), அஸ்வின் (0) என ஆட்டமிழக்க, அரைசதம் அடித்து ஆறுதல் தந்தார் கே எல் ராகுல். இறுதியில் இவரும் 79 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார். அதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ப்ளேஆப் சுற்று
48 ரன்கள் வித்தியாசத்தில் மிகபெரிய வெற்றியை பெற்ற ஹைதராபாத் அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு மேலும் பிரகாசமாக ஆனது. மேலும் இந்த போட்டியுடன் விடைபெறும் அதிரடி வீரர் வார்னர், சொந்த நாடு திரும்புகிறார்.
இருவரும் தூண்கள்
இந்த வெற்றி குறித்து ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன் கூறியதாவது: இந்த தொடர் முழுவதும் ஜானி பெயர்ஸ்டோவ் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் அணிக்கு இரு தூண்களாக திகழ்ந்துள்ளனர். கடைசி போட்டியில் வார்னரின் ஆட்டம் மிக அருமையாக இருந்தது.
நிச்சயம் சவால்
வார்னர் இல்லாமல் இனி வரும் போட்டிகள் ஹைதராபாத் அணிக்கு மிகவும் சவாலாக இருக்கும். நிச்சயம் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் அவர்களை பாராட்டியே ஆகவேண்டும் என்று கூறினார்.