நியூசிலாந்து போட்டியில்..
2014இல் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆக்லாந்தில் நடந்த ஒருநாள் போட்டியில், ஜடேஜா கடைசி ஓவரில் ஆடி போட்டியை டை செய்தார். அந்த போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து 314 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணியில் தோனி 50 ரன்கள் அடித்து 36வது ஓவரில் வெளியேற இந்தியா 184 ரன்களுக்கு 6 விக்கெட்கள் இழந்து தவித்து வந்தது.
அஸ்வின், ஜடேஜா கூட்டணி
14 ஓவரில் 130 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், அப்போது அஸ்வின், ஜடேஜா இணைந்து 85 ரன்கள் எடுத்தனர். அஸ்வின் வெளியேற ஜடேஜா தனியாளாக அணியை வழிநடத்தி சென்றார். கடைசி ஓவரில் 1 விக்கெட் மட்டுமே கையில் இருக்க, இந்திய அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவை.
டை செய்த ஜடேஜா
அப்போது ஜடேஜா இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்ஸ் அடித்து கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலைக்கு ஆட்டத்தை எடுத்து வந்தார். அப்போது பந்தை கவர் திசையில் தட்டி விட்ட ஜடேஜா ரன் எடுக்க ஓடினார். மறுபுறம் நின்ற இந்தியாவின் வருண் ஆரோன் இரண்டாவது ரன் ஓடி வந்த நிலையில், ஜடேஜா ஒரு ரன்னோடு நின்று விட்டார். அதனால், போட்டி டை ஆனது. ஒருவேளை அன்று ஜடேஜா இரண்டாவது ரன் ஓடி இருந்தால், ஜடேஜா இந்திய அணியின் ஹீரோவாக உயர்ந்திருப்பார். ஆனால், அப்போது முதல் இணையத்தில் ஜடேஜாவை வைத்து கிரிக்கெட்டை கேலி செய்யும் போக்கு அதிகரித்தது.
ஜடேஜாவின் இரண்டாவது டை
நேற்றைய போட்டியிலும் ஜடேஜா, கடைசி இரண்டு பந்துகளில் 1 ரன் தேவை என்ற நிலையில், கீழே தட்டி விட்டு ஓடி இருந்தால் கூட எளிதாக வென்று இருக்கலாம். ஆனால், ஜடேஜா தூக்கி அடித்து அவுட்டாக, போட்டி டை ஆனது. ஜடேஜா கடைசி ஓவரில் நின்றாலே போட்டி டை ஆகிவிடுமோ?