
2வது போட்டி
இதில் டாஸ் வென்ற நியூ கினியா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அமெரிக்க அணி, 271/9 ரன்கள் குவித்து அசத்தியது. டார் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேறி திணறினர். முதல் 5 விக்கெட்கள் மிக வேகமாக சரிந்த நிலையில் 6ஆவது இடத்தில் களமிறங்கிய ஜாஸ்கரன் மல்கோத்ரா ஒற்றையாளாக போராடினர்.

மல்கோத்ரா அதிரடி ஆட்டம்
அதிரடியாக விளையாடிய அவர், 124 பந்துகளில் 4 பவுண்டரி, 16 சிக்சருடன் 173 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம், முதல் சதமடித்த அமெரிக்க வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதுமட்டுமல்லாமல் வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார். பபுவா நியூ கினியா அணியின் பந்துவீச்சாளர் காடி டோகா வீசிய கடைசி ஓவரில் 6 பந்துகளையும் சிக்ஸருக்கு விரட்டி உலக சாதனை படைத்துள்ளார்.

உலக சாதனை
இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டியில் ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னர் கடந்த 2007ம் ஆண்டு தென்னாப்பிரிக்க வீரர் ஹெர்ஷல் கிப்ஸ் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசியிருந்தார். ஒட்டு மொத்த சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்த மைல்கல்லை எட்டிய 4-வது வீரரும் மல்கோத்ராவே ஆகும்.

இந்திய வம்சாவளி வீரர்
பஞ்சாப் மாநிலம் சண்டிகாரை சேர்ந்த ஜாஸ்கரன் மல்கோத்ரா, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்தவர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அமெரிக்க அணிக்காக விளையாட சென்றுவிட்டார். இவருக்காக தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











