ரொம்ப வருத்தமா இருக்கு
இருவரும் செய்தியாளர்களிடம் பேசுகையில், சில அதிகாரிகள் கூறிய கருத்துக்கள் எங்களை வருத்தமடைய வைத்துள்ளது.
மீடியாவில் போய் சொல்லாமா
அதுவும் தங்களது கருத்துக்களை மீடியா மூலமாக அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். அதை நாங்கள் ரசிக்கவில்லை.
ஆச்சரியமாக இருக்கு
வங்கதேசத்தில் என்னிடம் செய்தியாளர்கள், நீங்கள் எப்போது ஓய்வு பெறுவீர்கள் என்று கேட்டதற்கு, உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு பார்க்கலாம் எனறு கூறியிருந்தோம். அதை இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் பெரிய பிரச்சினையாக்கியிருப்பது ஆச்சரியமாக உள்ளது என்றனர்.
வயசாச்சுல்ல
சங்க்ககரா கூறுகையில், எனக்கு 37 வயதாகிறது. எனவே அடுத்த உலகக் கோப்பையில் என்னால் ஆட முடியாது. அதை மனதில் கொண்டுதான நான் அப்படிக் கூறினேன் என்றார்.
ஜெயசூர்யா
இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைராக உள்ள சனத் ஜெயசூரியாதான் இருவரையும் விமர்சித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம். ஜெயசூரியா முன்னாள் கேப்டனும் கூட.