முச்சதம் அடித்த கருண்நாயர்
இன்று 4வது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி அதிரடியைக் காட்டியது. இந்திய அணி வீரர் கருண் நாயர் டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அத்துடன் இதே போட்டியில் இரட்டை சதத்தையும் கடந்து முச்சதத்தையும் (303 ரன்கள்) எட்டி அசத்தினார்.
759 ரன்களில் டிக்ளேர்
இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 759 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. 3-வது டெஸ்ட் போட்டியிலேயே முச்சதம் விளாசினார் கருண் நாயர்.
மற்றொரு சாதனை
இந்திய அணியில் ஷேவாக்குக்கு அடுத்த முச்சதம் விளாசிய வீரர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். அதேபோல் இந்திய வீரர் ஒருவர் தனது முதல் சதம் விளாசிய போட்டியிலேயே இரட்டை சதத்தைக் கடந்தது இது 3வதாகும். முன்பு, திலிப் சர்தேசாய் மற்றும் வினோத் காம்ப்ளி ஆகியோர் தங்களது முதலாவது டெஸ்ட் சதத்தை இரட்டை சதங்களாக மாற்றியவர்களாகும்.
இன்னொரு சாதனை
கேரளாவை சேர்ந்த ஒரு கிரிக்கெட் வீரர் டெஸ்ட்டில் சதம் அடித்தது இதுதான் முதல் முறை. முச்சதம் என்பது அதில் மிகப் பெரிய மைல் கல்லாகும். இச்சாதனையை முறியடிக்க மிக நீண்டகாலமாகும்.