ஐபிஎல் நடக்க வேண்டும்
கெவின் பீட்டர்சன் கூறுகையில், "விரைவில் ஜூலை - ஆகஸ்ட் மாதத்தில் ஐபிஎல் தொடர் நடக்க வேண்டும் என நான் நம்புகிறேன். மேலும், இது தான் கிரிக்கெட் சீசனை துவங்கி வைக்கப் போகிறது எனவும் நான் நினைக்கிறேன்" என கூறி உள்ளார்.
இப்படி நடத்தலாம்
மேலும், "உலகின் ஒவ்வொரு வீரரும் ஐபிஎல் தொடரில் ஆட ஆர்வமாக உள்ளனர். ஐபிஎல் அணிகள் மற்றும் பொருளாதாரத்திற்கு பணம் வரும் வகையில் மூன்று இடங்களில், ரசிகர்கள் இல்லாத மூடப்பட்ட மைதானத்தில், மூன்று, நான்கு வாரங்களில் இந்த தொடரை நடத்தலாம்" என அவர் கூறியுள்ளார்.
குறுகிய தொடர்
மூன்று இடங்களில் மிக குறுகிய அளவில் அந்த தொடரை நாம் நடத்தலாம். அதன் மூலம், பாதுகாப்பாக நாம் இருக்க முடியும். இந்த சூழ்நிலையில், ரசிகர்களை நாம் ரிஸ்க் எடுக்க வைக்க முடியாது எனவும் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.
தேவையில்லாத ஒன்று
கெவின் பீட்டர்சன் கூறுவது கிரிக்கெட் வீரரின் பார்வையில், கிரிக்கெட் ரசிகனின் பார்வையில் சரியாக இருந்தாலும், இந்தியாவில் சாமானிய, நடுத்தர மற்றும் ஏழை மக்களின் பார்வையில் தேவையில்லாத ஒன்றாகவே உள்ளது.
ஊரடங்குக்குப் பின் என்ன?
மக்கள் பலர் 21 நாட்கள் ஊரடங்குக்குப் பின் என்ன நடக்கும் என்ற பீதியில் உள்ளனர் என்பதே உண்மை. அவர்கள் யாரும் ஐபிஎல் பற்றி கவலைப்படவில்லை. ஒருவேளை நிலைமை சீரானால் அதன் பின் ஐபிஎல் தொடரை நடத்தலாம்.