முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்
போட்டிக்கு பிறகு இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி கூறியதாவது: முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது. அவர்கள் என்னதால் அதிரடியை ஆரம்பித்தாலும் 220 ரன்களுக்குள்ளாவது மடக்கியிருந்தால் இந்தியாவுக்கு வெற்றி எளிதானதாக இருந்திருக்கும்.
எல்லா நாளும் பொன் நாளே
விக்கெட்டுகளை கொத்துக் கொத்தாக இந்திய அணி வீரர்கள் இழந்தது சரியில்லை. டெஸ்ட் போட்டியின் அனைத்து நாட்களிலுமே நமக்கு வெற்றிக்கான வாய்ப்பு திறந்தே இருந்தது. ஏதாவது ஒரு நாளை நாம் முழுமையாக கையகப்படுத்தியிருந்தால் வெற்றி நமக்கு கிடைத்திருக்கும்.
ஒருவராவது அடித்திருக்க வேண்டும்
இந்திய அணியின் சேஸிங்கின்போது பேட்ஸ்மேன்கள் கை கொடுக்க தவறிவிட்டனர். யாராவது ஒருவர் 75-80 ரன்கள் எடுத்திருந்தாலும் வெற்றிக்கு வாய்ப்பு இருந்தது. தென் ஆப்பிரிக்க அணிக்கு பெருமை சேர வேண்டும். அவர்கள் அணியில் ஒரு பவுலருக்கு காயம் ஏற்பட்டு வெளியேறிவிட்டார். இருப்பினும் சிறப்பாக பந்து வீசி வெற்றி பெற்றனர்.
மன வலிமை உள்ளது
பார்ட்னர்ஷிப்புகளை உருவாக்குவதில்தான் டெஸ்ட் போட்டியின் வெற்றி அடங்கியுள்ளது. நாம் அதில் கோட்டை விட்டோம். நம்மைவிட தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேனக்ள் அதை சிறப்பாக செய்தனர். வெளிநாடுகளில், சவாலான மைதானங்களில் ஆடும்பபோது மனவலிமை முக்கியமானது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மனவலிமை பாராட்டுக்குரியதாகவே இருந்தது. இவ்வாறு கோஹ்லி தெரிவித்தார்.