3வது டெஸ்ட்
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் தொடர் அகமதாபாத்தில் உள்ள மோத்திரா மைதானத்தில் நடக்கவுள்ளது. சமீபத்தில் மறுசீரமைக்கப்பட்ட இந்த மைதானம் உலகின் மிகப்பெரும் கிரிகெட் மைதானமாகும். இங்கு 3வது டெஸ்ட் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.
பரபரப்பு
இங்கிலாந்து அணி 3வது டெஸ்டில் தோற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து வெளியேறும். அதே சமயம் 2வது டெஸ்டில் அடைந்த படுதோல்விக்கு பழிதீர்க்க வேண்டிய கட்டாயத்திலும் இங்கிலாந்து உள்ளது. இதனால் இரு அணிகளும் வெற்றி பெற வேண்டி போராடும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
குல்தீப் வேண்டாம்
3வது டெஸ்டில் செய்ய வேண்டிய மாற்றம் குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார். அவர், அகமதாபாத் மைதானத்தில் 3 வேகப்பந்து வீச்சாளார்களுடன் இந்திய அணி களமிறங்க வேண்டும். குறிப்பாக குல்தீப் யாதவ் வெளியேறி கொண்டால் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ் ஆகியோரின் கூட்டணியை பார்க்கலாம்.
பாண்ட்யா வருவாரா..
பகலிரவு டெஸ்ட் போட்டி என்பதால் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். எனவே ஹர்திக் பாண்டியா ஒரு வேளை காயத்தில் இருந்து மீண்டிருந்தால் இந்திய அணிக்கு பந்துவீச்சில் மிக உதவியாக இருப்பார் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.