
2வது டெஸ்ட் போட்டி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் பகலிரவு போட்டியுடன் கூடிய 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த 17ம் தேதி துவங்கியது. முதலில் நடைபெற்ற பகலிரவு போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்துள்ளது. இதையடுத்து பார்டர் -கவாஸ்கர் கோப்பைக்கான இரண்டாவது போட்டி வரும் 26ம் தேதி துவங்கவுள்ளது.

வீரர்களை ஊக்குவித்த கேப்டன்
கேப்டன் விராட் கோலி பகலிரவு போட்டியில் பங்கேற்றுவிட்டு தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி இந்தியா திரும்பியுள்ளார். நேற்றைய தினம் அவர் தனது பயணத்தை துவக்கினார். முன்னதாக ரஹானே தலைமையில் இந்திய வீரர்கள் தங்களது சிறப்பான பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று அவர் வீரர்களை ஊக்குவித்தார்.

ஜடேஜா, குல்தீப் பயணம்
இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டியையொட்டி இந்திய அணியினர் மெல்போர்ன் சென்றடைந்துள்ளனர். கடந்த பகலிரவு போட்டியில் காயம் காரணமாக இடம்பெறாத ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர். அவர்களும் தங்களது பயணத்தை மேற்கொண்டனர்.

இன்ஸ்டாகிராமில் பதிவு
இதனிடையே, தங்களது பயணத்தின்போது, ஜடேஜா மற்றும் குல்தீப் ஆகியோர் செல்பி எடுத்து தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டனர். ஜடேஜா தன்னுடைய பதிவில் நெக்ஸ்ட் ஸ்டாப் மெல்போர்ன் என்று கேப்ஷன் வெளியிட்டுள்ளார். வரும் சனிக்கிழமை துவங்கவுள்ள இந்த போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி கொள்வதன்மூலம் தொடரை 1க்கு ஒன்று என சமன்படுத்த இந்தியா தீவிரம் காட்டி வருகறது.


Click it and Unblock the Notifications











