
யார் என்று பரிசோதனை
ரகானே, ஷ்ரேயாஸ் ஐயர், ரெய்னா, மனீஷ் பாண்டே என பலரை அந்த வரிசையில் பரிசோதிக்கப்பட்டனர். பின்னர் அந்த இடத்தில் ராயுடு உறுதி செய்யப்பட்டார். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அவர் சொதப்பியதால் ராயுடு இந்திய அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

நீக்கப்பட்ட ராயுடு
உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடரில் ராயுடு அணியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரம் ஒரு உண்மையை சொல்லியது. 4ம் இடத்திற்கு வேறு ஒருவரை போடலாம் என்பதே இந்திய அணி நிர்வாகத்தின் முடிவாக இருக்கிறது.

நிர்வாகம் யோசனை
ராயுடு சொதப்பிய அதேவேளையில், விஜய் சங்கர் இடம்பெறுவார் என்றும். அவர் பொருத்தமாக இருப்பார் என்றும் பலரும் கருத்து தெரிவித்தனர். களத்தில் ஏற்படும் நிலைமைகளுக்கு ஏற்ப கோலியை கூட 4ம் வரிசையில் களம் இறக்கலாம் என்றும் அணியின் நிர்வாகத்துக்கு ஒரு யோசனை இருக்கிறது.

கருத்து சொல்லும் கம்பீர்
4ம் வீரராக களம் இறக்க சரியான நபர் சஞ்சு சாம்சன் என்று கம்பீர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ராயுடு தான் பொருத்தமானவர் என்பது முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணனின் கருத்தாகும்.

வேண்டும் ராயுடு
அவர் 4ம் வரிசையில் நன்றாக ஆடிக்கொண்டிருந்தார். அந்த தருணத்தில் ஆஸ்திரேலிய தொடரில் அவரை பாதியில் ஓரங்கட்டி விட்டனர். இது ரொம்ப அதிர்ச்சியை ஏற்படுத்திய விஷயம். உலக கோப்பையில் ராயுடுவையே நான்காம் வரிசையில் இறக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











