என்ன பிரச்சனை
ஐக்கிய அரபு எமிரகத்தில் நடந்த அஜ்மான் ஆல் ஸ்டார்ஸ் தொடரில் இந்த சூதாட்டம் நடைபெற்று இருக்கிறது. எண்ணெய்வள நாடுகள் பல இந்த போட்டியில் கலந்து கொண்டது. ஐசிசி மற்றும் ஐக்கிய அரபு எமிரக கிரிக்கெட் போர்டின் அங்கீகாரம் பெற்ற போட்டியாகும் இது.
|
என்ன செய்தார்கள்
இதில் துபாய் அணியும் ஷார்ஜா அணியும் மோதிக் கொண்ட போட்டியில் சூதாட்டம் நடந்துள்ளது. அனைத்து வீரர்களும் வேண்டுமென்றே அவுட் ஆனது தெரியவந்துள்ளது. இந்த மோசமான ஆட்டம் வீடியோவாக வெளியாகியுள்ளது.
|
கொஞ்சம் நடிங்க
இதுகுறித்து இவர் ''அவங்க ரன் அவுட் ஆகுற விதத்தை பாருங்களேன். கொஞ்சமாவது தெரியாத மாதிரி அவுட் ஆகுங்க பாஸ்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
கைவிடப்பட்டது
தற்போது இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது. மேலும் அஜ்மான் ஆல் ஸ்டார்ஸ் தொடர் இந்த போட்டி காரணமாக கைவிடப்பட்டு இருக்கிறது. ஐசிசி இன்னும் சில நாளில் விசாரணையை தொடங்கும் என கூறப்படுகிறது.
|
தெரிகிறது
இதுகுறித்து இவர் ''இவர்கள் விளையாடுவதை பார்த்தாலே சூதாட்டம் செய்தது தெரிகிறது. விசாரணையே தேவையில்லை. இவர்களுக்கு வாழ்நாள் தடைவிதிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.