
2015ல் திட்டமிட்டோம்
இதுகுறித்து அனுராக் தாக்கூர் கூறுகையில், கடந்த வருடம் இந்தியா - பாகிஸ்தான் தொடருக்குத் திட்டமிட்டோம். ஆனால் நடக்கவில்லை. இந்த வருடம் அப்படி எந்தத் திட்டமும் இல்லை.

ஆசியாக் கோப்பைப் போட்டி
இந்தியாவும், பாகிஸ்தானும் இந்த வருடம் நடைபெறும் ஆசியாக் கோப்பைப் போட்டி மற்றும் டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டிகளில் சந்திக்கவுள்ளன. அது பன்னாட்டு தொடராகும். இரு தரப்புத் தொடர் அல்ல என்றார் அவர்.

பாகிஸ்தானின் நம்பிக்கை
அதேசமயம், இரு நாடுகளுக்கும் இடையே இந்த வருடம் நிச்சயம் இரு தரப்பு தொடர் நடைபெறும் என்று பாகிஸ்தான் நம்பிக்கை வெளியிட்டு வருகிறது. இங்கிலாந்தில் இந்தத் தொடர் நடைபெறலாம் என்றும் அது கூறி வருகிறது.

இரு நாடுகளின் நிலவரம்
இந்தியா பாகிஸ்தான் தொடருக்கு மத்திய அரசு இதுவரை ஆதரவு தெரிவிக்கவில்லை. மேலும் இந்தியாவிலும் அதற்கு கடும் எதிர்ப்பு உள்ளது. அதேசமயம், பாகிஸ்தான் வாரியம் இந்தியாவுடன் மோத ஆர்வம் காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











