குடும்பத்தினருக்கு..
மேலும், ஐபிஎல் துவக்க விழாவிற்காக செலவு செய்ய ஒதுக்கி வைத்திருந்த தொகையை பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, வழக்கமாக நடைபெறும் பிரம்மாண்ட ஐபிஎல் துவக்க விழாவை இந்த முறை நாம் காண முடியாது.
15 கோடி
ஏற்கனவே, பிசிசிஐ ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு 5 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்திருந்தது. தற்போது ஐபிஎல் துவக்க விழாவிற்கு 15 கோடி வரை செலவு செய்ய திட்டமிடப்பட்டதாக கூறப்படும் நிலையில், அந்த தொகையும் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப்படும் என கூறப்படுகிறது.
இது தேவையா?
முந்தைய ஐபிஎல் தொடர் துவக்க விழாக்கள் நடைபெற்ற போது, பொதுமக்கள் பலர் பணத்தை வீணாக்கி நடத்தப்படும் இத்தனை பிரம்மாண்ட விழா தேவையா என கேள்வி எழுப்பி வந்தனர்.
நடைமுறையாக மாறுமா?
இந்நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் துவக்க விழா ரத்து செய்யப்பட்டு இருப்பதோடு, அந்தத் தொகை ஒரு நல்ல காரியத்துக்குப் பயன்பட உள்ளது. இனி வரும் ஆண்டுகளிலும் பிசிசிஐ இதே நடைமுறையை பின்பற்றுமா?