தாக்குதல்
இந்திய வீரர்களை குரங்கு என்று கூறி இன ரீதியாகவும், மதத்தை குறிப்பிட்டும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக சிராஜ், பும்ரா, சைனி ஆகியோரை குறி வைத்து இதுபோன்ற இனவெறி தாக்குதல்களை நடத்தி உள்ளனர். நேற்றும் இந்திய வீரர் சிராஜை ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் குரங்கு என்று கூறியுள்ளனர்.
சீண்டினார்கள்
அதோடு சிராஜை தொடர்ந்து வார்த்தைகளால் அச்சுறுத்தி வந்துள்ளனர். சிராஜ் தனது வருத்தத்தை முகத்தில் வெளிப்படையாக காட்டினார். இதையடுத்து இந்திய அணியின் கேப்டன் ரஹானேவிடம் சிராஜ் புகார் அளித்தார். இதை தொடர்ந்து சிராஜை சீண்டிய ஆஸ்திரேலிய ரசிகர்கள் 6 பேர் வெளியேற்றப்பட்டனர்.
எப்படி
6 ரசிகர்களும் வெளியேற்றப்பட்ட வீடியோ நேற்று வெளியானது. ஆனால் இந்த 6 பேரும் சிராஜை சீண்டிய வீடியோ வெளியாவில்லை. சிராஜிடம் இவர்கள் இனவெறி ரீதியாக நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகவில்லை. இந்த சம்பவம் பெரிய அளவில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சந்தேகம்
சிட்னி மைதானம் முழுக்க பல நூறு கேமராக்கள் உள்ளது. ஆனால் ஒரு கேமராவில் கூட இந்த சம்பவம் பதிவாகவில்லையா என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக ஒரு வீடியோ கூட வெளியாகாதது எப்படி? ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இது தொடர்பான வீடியோக்களை வெளியிடாதது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.அதுவும் ஐசிசி விசாரணை நடக்கும் நிலையில் வீடியோ வெளியாகாமல் உள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மோசம்
இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய அழைத்து ஏற்கனேவே அந்த அணி நிர்வாகம் பல முறை அவமானப்படுத்திவிட்டது. இந்த நிலையில் தற்போது இனவெறி தாக்குதலுக்கான ஆதாரங்களை கூட வெளியிடாமல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அரசியல் செய்து வருகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இந்த செயல் காரணமாக கடைசி டெஸ்ட் போட்டி நடக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.