வீணான வாய்ப்பு
இந்த தொடரில் இளம் வீரர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பிசிசிஐயை சோதித்துப் பார்த்திருக்கலாம் என்று பல கிரிக்கெட் விமர்சனங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சஞ்சு சாம்சனுக்கு போதிய வாய்ப்பு கொடுக்காமல் இந்திய அணி நிர்வாகம் வீணடித்து வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர் என ஆறு போட்டிகளில் இந்திய அணி விளையாடியது.
ரஜத் பட்டிதாருக்கு வாய்ப்பு
இதில் சஞ்சு சாம்சனுக்கு ஒரே ஒரு போட்டியில் மட்டும் தான் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் வாய்ப்பு வழங்கியது. இந்த நிலையில், வரும் நான்காம் தேதி தொடங்க உள்ள வங்கதேச தொடரில் களமிறங்கும் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் தூல், வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சனை சேர்க்காமல் ரஜத் பட்டிதாருக்கு வாய்ப்பு வழங்கி இருக்கிறார்கள்.
புரியவில்லை
ரஜத் பட்டிதார் நன்றாக விளையாடுகிறார் என்று எனக்கு தெரியும். ஆனால் சாம்சனுக்கு போன்ற திறமை வாய்ந்த வீரர்களுக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. வங்கதேச தொடரிலாவது சோதித்துப் பார்த்திருக்கலாம். ஆனால் அவரை வங்கதேச தொடரில் சேர்க்காமல் நீக்கிவிட்டது ஏன் என்று எனக்கு புரியவில்லை. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு தராமல் எதற்கு ரஜத் பட்டிதார் என்ற புதிய வீரரை அணியில் சேர்த்து இருக்கிறீர்கள்.
2 பேருமே இல்லை
அக்டோபர் மாதம் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலே ரஜத் பட்டிதார் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். எனினும் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு தரப்படவில்லை. தற்போது வங்கதேச தொடரிலும் அவருக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்காது. எனினும் 17 பேர் கொண்ட இந்திய அணியில் கூட சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சேர்க்கப்படாதது தான் தற்போது பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது.