இஸ்லாமாபாத்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 15 முதல் தொடங்க உள்ள நிலையில், பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அஹ்மத் இந்தியாவிற்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார்.
மேலும், தற்போது இங்கிலாந்தில் தடுமாறி வரும் இந்தியாவை பற்றி கூறுகையில், பாகிஸ்தான் அதிக பயிற்சிப் போட்டிகளில் ஆடியதால் இங்கிலாந்தில் சிறப்பாக செயல்பட்டது என கூறி இருக்கிறார்.
சர்பராஸ் இங்கிலாந்து தொடர் குறித்து பேசுகையில், பாகிஸ்தான் அணி 25 நாட்கள் முன்பே சென்று, மூன்று பயிற்சி போட்டிகளில் பங்கேற்றோம். அதுதான், எங்கள் சிறப்பான செயல்பாட்டுக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
தற்போது இங்கிலாந்தில், இந்திய அணி ஒரே ஒரு பயிற்சி போட்டியில் தான் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா பல பயிற்சி போட்டிகளில் பங்கேற்று இருக்க வேண்டும் என கவாஸ்கர் உள்ளிட்ட பலரும் கூறிய நிலையில், பாகிஸ்தான் கேப்டனும் அதையே தெரிவித்துள்ளார்.