கேப்டன் மிஸ்பா தலைமையில்
பாகிஸ்தான் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணிகளுக்கான கேப்டன் மிஸ்பா உல் ஹக் தலைமையில் சில மூத்த வீரர்கள் வாரியத் தலைவர் நஜம் சேத்தியை சமீபத்தில் சந்தித்து ஊதிய உயர்வு கோரிக்கையை வைத்தனர்.
நல்ல சம்பளம் தாங்க பாஸ்
சந்திப்பின்போது மிஸ்பா கூறுகையில், சமீப காலமாக வீரர்களுக்கு முறையாக ஊதியம் தரப்படுவதில்லை. அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியமும் நல்ல சம்பளம் தருகிறார்கள். நமது வீரர்களுக்குத்தான் சரியான சம்பளம் தரப்படுவதில்லை என்றாராம் மிஸ்பா.
30 முதல் 35 சதவீதம் உயர்வு அவசியமுங்க...
எனவே நமது வீரர்களுக்கு 30 முதல் 35 சதவீத ஊதிய உயர்வை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தாராம் மிஸ்பா.
ஆகட்டும் பார்க்கலாம்
மிஸ்பாவின் கூற்றையும், பிற வீரர்களின் கோரிக்கைகளையும் கேட்டுக் கொண்டு நஜம் சேத்தி, அதுகுறித்து பரிசீலிப்போம் என்றும் உரியவர்களுடன் ஆலோசனை நடத்துவதாகவும் உறுதியளித்தாராம்.
மாசச் சம்பளம் ரூ. 3.25 லட்சம்தான்
தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள ஒப்பந்த வீரர்களுக்கு மாதம் 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.
கடந்த வருட உயர்வு 15 சதவீதம்
கடந்த வருடம்தான் தனது வீர்ரகளுக்கான சம்பளத்தை 10 முதல் 15 சதவீதம் வரை உயர்த்தியது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.