எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கக் கூடாது
பாகிஸ்தான் சூப்பர் லீக் குறித்து முதல் ஆண்டிலேயே அதிக எதிர்பார்ப்பு இருக்கக் கூடாது. 3 அல்லது நான்கு ஆண்டுகளாவது ஆக வேண்டும். அப்போதுதான் ரிசல்ட் கிடைக்க ஆரம்பிக்கும்.
கோஹ்லியும், ரோரஹித்தும்
உடனடியாக நாம் கோஹ்லி போன்ற வீரர்களையோ அல்லது ரோஹித் சர்மா போன்றவர்களையோ எதிர்பார்க்க முடியாது. அது நடக்கவும் வாய்ப்பில்லை.
இளம் வீரர்களுக்கு உதவும்
பாகிஸ்தான் சூப்பர் லீக் நிச்சயம் இளம் பாகிஸ்தான் வீரர்களுக்கு உதவும். எப்படி ஐபிஎல் மூலம் இந்திய அணிக்கு பல நல்ல வீரர்கள் கிடைத்தனரோ, அதேபோல போல பாகிஸ்தான் அணிக்கும் பல நல்ல வீரர்கள் கிடைக்க இந்த லீக் உதவும்.
பொறுமை அவசியம்
அதேசமயம், நமக்கு பொறுமை அவசியம். சர்வதேச அளவிலான அனுபவம் நமது இளம் வீரர்களுக்குப் பழக வேண்டுிம். அதன் பிறகுதான் நம்மால் நமது இளம் திறமைகளை உரிய முறையில் பயன்படுத்த முடியும் என்றார் அவர்.